பதிவு செய்த நாள்
12
பிப்
2019
03:02
புதுச்சேரி:அப்பா பைத்தியம் சுவாமி குரு பூஜை விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.காரைக்காலில் இருந்து, மாகி செல்வதற்காக, முதல்வர் நாராயணசாமி நேற்று (பிப்., 11ல்) சேலம் சென்றார். ரயிலில் புறப்படுவதற்கு முன்னதாக, சேலத்தில் அமைந்துள்ள, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு நேற்று (பிப்., 11ல்) இரவு 8:30 மணியளவில் சென்றார்.கோவிலில் நடந்த குரு பூஜை விழாவில் நாராயணசாமி பங்கேற்று, சுவாமிக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டார். சுவாமி முன் அமர்ந்து மனமுருக பிரார்த்தனை செய்தார். பின், மாகி புறப்பட்டார்.முன்னதாக, புதுச்சேரியில், கோரிமேட்டில் உள்ள, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் நடந்த குரு பூஜையில், முன்னாள் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.