பதிவு செய்த நாள்
12
பிப்
2019
04:02
“அனப்யாசே விஷம் வித்யா, அஜீர்ணம் போஜனம் விஷம் ந விஷம், சபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம் நந” என்பது, வாழ்க்கைக்கு
பயன்படக்கூடிய ஒரு ஸ்லோகம். வியாசமுனிவர் பதினெட்டு புராணங்களில் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். மற்றவர்களுக்கு நாம்
பரோபகாரம் (நன்மை) செய்தால் நமக்கு புண்ணியம் சேருகிறது என்பது அவரது அறிவுரை. பரோபகாரம் செய்ய எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. படித்த நாமே, நடைமுறையில் பரோபகாரம் செய்யாமல் இருந்தால், படித்த படிப்பு வீணாகி விடுகிறது.... சில நாட்களில், நாம்
படித்ததையே மறந்து விடுகிறோம். பிறகெப்படி நம்மால் உதவ முடியும்? சரி... இனி, மேற்கண்ட ஸ்லோகம், நமக்கு உணர்த்தும் அறிவுரையைப் பார்ப்போம். நமக்கு சக்தி கொடுக்கும் உணவே, சில சமயங்களில், நமக்கு எதிரியாக மாறுகிறது. நம்மால் ஒன்றும் சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. அப்பொழுது ‘லங்கணம் பரம ஔஷதம்’ என்று சொல்லுவார்களே! அதன்படி, மேற்கொண்டு உணவு அருந்தாமல், வெறும் நீரோ அல்லது எளிமையான உணவு உட்கொள்வதோ, நம் வயிற்றிற்கும், உடலுக்கும் நல்லது. மேலும் மேலும் உணவு அருந்தினால், அது நமக்கு
எதிரியாக அல்லது விஷமாகி விடுகிறது. அதுபோல, ஒருவன், தன்னுடைய நேரத்தையும் பணத்தையும், ஆடம்பரமான கூட்டங்களில், வெறும்
பெயருக்காக செலவழிப்பது விரும்பத்தக்க விஷயமில்லை. ‘விரலுக்கு தகுந்த வீக்கம்’ என பெரியோர்கள் சொல்லுவார்களே! அதை ஞாபகத்தில் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல! விஷயமே தெரியாத ஒருவன், ஒரு விவாதத்தில் ஈடுபடுவதும்
நல்லதில்லை. ஒரு வயோதிகர் தன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், இளம் கன்னியை மனைவியாக மணம் புரிவது நன்மையில் முடியாது. அதுபோல், ஒரு இளம் கன்னி, வயோதிக கணவனுக்கு துன்பத்தை தருவது தவிர்க்க முடியாத விவகாரம். நம்முடைய குறைபாடுகளை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்பாகவே எடுப்பது உசிதம்.