மனிதர்கள் எந்த செயலைச் செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்து விடுகிறது. நம்பிக்கையின் அவசியம் பற்றி இயேசுநாதர் உதிர்க்கும் முத்தான மூன்று பொன்மொழிகள் இதோ: * நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, “கடலில் பெயர்ந்து விழு” என்றாலும் அப்படியே நடக்கும். * நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள். * நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான். இத்தகைய இதயம் உங்களில் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.