திருப்பதி: திருமலையில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் இந்த விழா நடைபெறும் ஒன்பது நாட்களிலும் ஒன்பது விதமான வாகனங்களில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஒன்பது நாட்களில் ஒன்பது வாகனங்களில் வலம்வரும் மலை யப்பசுவாமி ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விழா தான் ரதசப்தமி விழாவாகும். அதிகாலை ஐந்து மணி்க்கு சூரிய பிரபை வாகனத்தில் ஆரம்பித்து சின்ன சேஷ வாகனம், கரூட வாகனம், ஹனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வபூபாள வாகனம், சந்திரபிரபை வாகனம் என ஏழு வாகனங்களில் வலம்வரக்கூடிய சுவாமியை தரிசிக்க ரதசப்தமி திருநாளான இன்று பெரு ந்திரளாக பக்தர்கள் திருமலையில் கூடியுள்ளனர். இதுவரை முதல் மூன்று வாகனங்களில் வந்துள்ளார். இரவு 8 மணிக்குள் மீதம் உள்ள வாகனங்களில் வலம்வருவார்.