பதிவு செய்த நாள்
13
பிப்
2019
12:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் மாசி தேரோட்டம் பிப்.,19ல் நடக்கிறது. பெருவயல் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான சுவ சுப்பிரமணியசுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் மாசி மக திருவிழா பிப்.,8ல் முப்பிடாரி அம்மன் காளியூட்டம் நடந்தது. பிப்.,9ல் அனுக்ஞை, காப்புகட்டு நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை பல்லக்கு, இரவு சிவசுப்பிரமணியசுவாமி சிறப்பு அபிேஷகம் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
இதனை தொடர்ந்து சுவாமி அன்னம், மேஷ, பூத, கைலாச, யானை, மயில், குதிரை, புஷ்ப, காமதேனு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. பிப்., 19 ல் திருத்தேரில் காலை 8:00 மணிக்கு சுவாமி எழுந்தருளல், காலை 10:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 20ல் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் பழனிவேல்பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, ஆகியோர் செய்து வருகின்றனர்.