திருக்கோவிலூர் பெருமாள் பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 02:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதிக்கு, பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர்.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்‚ கண்ணன் பட்டாச்சாரியர் தலைமையில், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திருப்பதிக்கு, நேற்று (பிப்., 13,ல்) நடைபயணம் துவங்கினர்.கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பயணத்தை‚ ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி‚ திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.