தேவாரம் பாடிய சுந்தரருக்கு சங்கிலி நாச்சியார், பரவை நாச்சியார் என்ற இரண்டு மனைவிகள் உண்டென்று அறிந்திருப்பீர்கள். அவருக்கு இரண்டு த்துப்புத்திரிகளும் உண்டு என்பது தெரியுமா? இவர் விழுப்புரம் அருகிலுள்ள திருநாவலூரைச் சேர்ந் தவர். இவரது திருமணத்தின் போது, றைவன் இடையில் புகுந்து, உன் முன்னோர் உன்னை எனக்கு அடிமை என சாசனம் எழுதித் தந்துள்ளனர். நீயோ, குடும்ப வாழ்க்கையில் புகப்பார்க்கிறாயே! எனக்கு பணி செய்ய வா, என அழைத்தார். வந்தது சிவன் எனத்தெரியாத சுந்தரர், அவரிடம் தகராறு செய்தார். இருந்தாலும், ஆதாரம் பலமாக இருந்ததால், ஊரார் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அவருடன் புறப்பட்டு கோயில் கோயிலாகச் சென்றார். ஒரு ஊரில் கோட்புலி நாயனாரைச் சந்தித்தார். அவருக்கு அழகே வடிவான இரண்டு மகள்கள் இருந்தனர். சிங்கடி, வனப்பகை என்பது அவர்களின் பெயர். அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி கோட்புலியார் சுந்தரரைக் கேட்டுக்கொண்டார். என் புத்திரிகளாக வேண்டுமானால் அவர்களை ஏற்கிறேன், எனச்சொல்லி ஏற்றார். அவ்வூர் இறைவனைப் பாடும் போது, தன் பெயரை சிங்கடியப்பன் என்று சொல்லியிருக்கிறார்.