சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2019 11:02
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட இக்கோயிலின் மாசிமகத்திருவிழா கடந்த பிப். 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாள் மண்டகப்படியாக நடக்கும் விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5ம் நாளான நேற்று பிப். 14 ம் தேதி ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி ஆத்மநாயகி அம்மனும், பிரியாவிடையுடன் ருத்ர கோடீஸ்வரரும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பெண்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. 6ம் நாளான இன்று பிப். 15 ம் தேதி கழுவன் திருவிழாவும், பிப். 18ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. பிப். 19 ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.