பதிவு செய்த நாள்
15
பிப்
2019
12:02
பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் 16 நாட்களில், ரூ. ஒரு கோடியே 86 லட்சத்து 65 ஆயிரம் காணிக்கை கிடைத்துள் ளது.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந் தது. தங்கம்- 671 கிராமும், வெள்ளி-6,920 கிராமும், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்-1486மும், ரொக்கமாக ரூ. ஒருகோடியே 86 லட்சத்து 65ஆயிரத்து 130 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், மதுரை மண்டல இணைஆணையர் பச்சையப்பன், முதுநிலைக்கணக்காளர் மாணிக்கவேல், மேலாளர் உமா, கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.