ஒலக்கூர் ஆஞ்சநேயர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2019 12:02
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் முதலாம் ஆண்டு நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 5:00 மணியளவில் கோ பூஜை நடந்தது. தொடர்ந்து வேத விற்பன்னர்களால் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை மாலை 6:00 மணி வரை நடந்தது. இதே போன்று நாளை 17ம் தேதி மாலை 6:00 மணி வரை நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி தீனதயாள ராமனுஜதாசர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.