பதிவு செய்த நாள்
18
பிப்
2019
12:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ராமாயண வரலாறு குறித்த மின்னொளி காட்சிகளை பயணிகள் வரவேற்றுள்ளனர்.ராவணன் சிறை பிடித்த சீதையை மீட்க ராமர், அனுமான், வானர சேனைகள் தனுஷ்கோடி, இலங்கை இடையே கடலில் பாலம் அமைத்து, ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரத்தில் ராமர் சிவனை பூஜித்ததால்ராமநாதசுவாமி கோயில் உருவானது.ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் ஒரு கோடி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் வட, தென் மாநில பக்தர்கள் வந்திறங்கும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் மராமத்து, புதுப்பித்தல் பணி நடக்கிறது.ரயில்வே நிர்வாகம், ராமாயண வரலாற்று நிகழ்வை பயணிகளுக்கு விளக்கும் வகையில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் நுழைவில், இலங்கையில் சீதை அனுமானிடம் மோதிரம் கொடுப்பது, தனுஷ்கோடி கடலில் பாலம் அமைப்பது, இலங்கையில் ராவணனுடன் போரிடும் நிகழ்வு குறித்து தத்ரூபமாக மின்னொளி காட்சியை வைத்துள்ளனர்.இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.