மதுரை நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2019 01:02
மதுரை: மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருந்திருவிழா கடந்த 11.2.19 அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 20.2.19 வரை நடை பெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று (பிப்., 18ல்) காலை 9.36 முதல் 9.53 மணிக்குள் கோயிலின் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடந்தது. நாளை (பிப்., 19ல்) காலை 8.25 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.