உசிலம்பட்டி அருகே சுகந்தவனப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2019 02:02
எழுமலை : உசிலம்பட்டி அருகே எழுமலை மள்ளப்புரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுகந்த வனப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி பிப்., 15 முதல் யாகசாலை பூஜைகள் துவங்கின. பிப்., 16 காலை 2ம் கால யாகசாலை பூஜைகள், மாலை 3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. திருக்கோஷ்டியூர் மாதவன் சொற்பொழிவாற்றினார். நேற்று (பிப்., 17ல்) அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்தன.
பின் புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர்ர் சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.
மேலூர் நொண்டிக்கோவில்பட்டி நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு தீபாராதனை, அபிஷேகம் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.