ஸ்ரீபெரும்புதூர்: மாசி மக உற்சவ விழாவை முன்னிட்டு, ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதூரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது.இங்கு மாசி மக உற்சவ விழா வெள்ளிக்கிழமை துவங்கியது. ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரையை முன்னிட்டு, நேற்று முன்தினம் (பிப்., 16ல்) ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து ஆதிகேசவர் மற்றும் ராமானுஜர், வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.விழாவின் மூன்றாம் நாளான நேற்று (பிப்., 17ல்), குலசேகர ஆழ்வார் சாற்றுமுறை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை (பிப்., 19ல்) கருட சேவையும், பிப்., 20 தவன உற்சவமும் நடைபெற உள்ளது.