மேட்டுப்பாளையம்:விவசாயம் வளர்ச்சி பெற்று செழிக்கவும், விவசாயிகள் நல்வாழ்வு வாழவும், 35 வகையான காய்கறிகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.காரமடை அருகேவுள்ள மருதூரில், மிகவும் பழமை வாய்ந்த ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, மூலவர் அனுமந்தராய சுவாமி கருவறையில் ராமபிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விமரிசையாக விழா நடைபெறும்.
மாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில், விவசாயம் வளர்ச்சி பெற்று செழிக்கவும், விவசாயிகள் நல்வாழ்வு வாழவும், 35 வகையான காய்கறிகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜையை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரங்கசாமியின் வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவும், முத்துக்கல்லூர், காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பக்தி பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன.