திருப்பூர்:திருப்பூர் மண்ணரை, செல்வபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவிலில், ராகு கேது பெயர்ச்சி யாக பூஜை நடந்தது.காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், அதனை தொடர்ந்து எண்கள் நமது கண்கள் என்ற தலைப்பில் அசோக் பாரதியின் சொற்பொழிவும் நடந்தது. மதியம், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.