அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2019 04:02
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வளாக திருமண மண்டபத்தில், கம்பன் கழகத்தின் 350 வது சொற்பொழிவு கூட்டம் நடந்தது. புரவலர் தினகரன் தலைமை வகித்தார். துணை செயலர் செல்வம் வரவேற்றார். மதுரை தமிழ்செல்வி கவலைக்கு மாமருந்து ராம நாமம் என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக, சத்திய சாயி சமிதி குழுவினர் பஜனை நடந்தது. விவேகானந்த கேந்திராவின் புத்தக கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை துணை செயலர்கள் கோடீஸ்வரன், நாகராஜ், பால்ராஜ் செய்தனர். செயலர் கணேசன் நன்றி கூறினார்.