பழநி : பழநி பச்சளநாயக்கன்பட்டியில் உள்ள சற்குரு சச்சிதானந்தம் பழனிசுவாமி ஆலயத்தில், ஜீவசமாதி குருபூஜை விழா நடந்தது. கணபதிஹோமம், சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சாதுக்களுக்கு மகேஸ்வரபூஜை நடந்தது.
இதைப்போல கணக்கன்பட்டி- கோம்பைபட்டி ரோட்டிலுள்ள ஜீவசமாதி கோயிலில் சிறப்பு வழிபாடு, பக்தி சொற்பொழிவு நடந்தது. பழநி மட்டுமின்றி சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.