பதிவு செய்த நாள்
18
பிப்
2019
04:02
சென்னிமலை: சென்னிமலை அடுத்த குமராபுரி, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சென்னிமலை டவுன் அடுத்த, ஈரோடு சாலையில், குமராபுரியில் செல்வ விநாயகர் கோவில், அமைந்துள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த வெள்ளிக்கிழமை காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜைகள், நடந்தன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், கோவில் பிரகார வலம் கொண்டு வரப்பட்டன. காலை, 8:35 மணிக்கு, செல்வ விநாயகருக்கும், மூலவர் விமானத் துக்கும், தொடர்ந்து, மூலவர் செல்வ மஹாகணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன.
கோவில் வளாகத்தில் உள்ள அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் வேதமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், 15 சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். விழாவில், ஈரோடு எம்.பி., செல்வகுமாரசின்னையன், எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, தனியரசு, ராமலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.