ஊட்டி அடுத்துள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2019 02:02
ஊட்டி:ஊட்டி அடுத்துள்ள எம்.பாலாடா அருகே கீழ் அப்புகோடு பகுதியில் அமைந்துள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, 10:30 மணிக்கு முருகபெருமானுக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, ஆடல், பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.