பதிவு செய்த நாள்
19
பிப்
2019
02:02
சேலம்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற வேண்டி, ஹயக்ரிவ வித்யா யாகம் நடந்தது. சேலம் மாவட்ட, சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை மகளிர் குழு சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, தேர்வு அச்சத்தை போக்க, சிறப்பு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எட்டாம் ஆண்டாக, சிங்கமெத்தை அருகே, எஸ்.எஸ்.வி., பள்ளியில், ஸ்ரீஹயக்ரீவ வித்யா யாகம், நேற்று (பிப்., 18ல்), சத்யராம் ஆச்சாரியார் தலைமையில் நடந்தது. ஆடிட்டர் ஜெயகோபி, திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் ரமண பாரதி ஆகியோர், அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். ஹயக்ரீவ வித்யா யாகத்தில் பங்கேற்ற, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, பேனா வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, சவுராஷ்டிரா சமூக அறக்கட்டளை, எஸ்.எம்.எஸ்., மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.