பதிவு செய்த நாள்
19
பிப்
2019
02:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (பிப்., 17ல்) தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜை நடந்தது. 10:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.முதலில் விநாயகர், இரண்டாவதாக வள்ளி தேவசேனா சமேத முருகர், நான்காவதாக அம்பாள், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர்கள் என நான்கு தேர்களுக்கு மத்தியில், பெரிய தேரில் சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ் வரர் எழுந்தருளினார்.
நமச்சிவாயா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலை 4:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இன்று (பிப்., 19ல்) மதியம் தென்பெண்ணையில் மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது.
தேர் சக்கரத்தில் சிக்கிஆசாரி கால் முறிந்ததுதேர் நிலையில் இருந்து புறப்பட்டு 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில் தேரின் இடப் பக்கத்தில், கட்டை போட்ட ஆசாரி கண்ணன் 64; தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில், அவரது வலதுபக்க முழங்காலின் கீழ் பகுதி நசுங்கியது.உடன், அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்குபுதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.இச்சம்பவத்தால், தேரோட்டம் தடைபட்டது. சிவாச்சாரியார்கள் பரிகார பூஜை செய்து, மதியம் 12:30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க, மீண்டும் தேர் புறப்பட்டு, மாலை நிலையை அடைந்தது.