பதிவு செய்த நாள்
19
பிப்
2019
03:02
திருப்போரூர்:திருப்போரூர் அருகே, வெங்கட்ராம சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (பிப்., 18ல்) நடந்தது.
திருப்போரூர் அடுத்த மேலையூரில், நாகபரணீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சைவ நெறிமுறைகளை பரப்பியவரான, சத்ரு பகவான், ஸ்ரீலஸ்ரீ வெங்கட்ராம சுவாமிகள், 2007ல் சித்தியடைந்தார்.
அவர் நினைவாக, சிவன் கோவில் அருகே, இவருக்கு கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவிலின் இரண்டாவது கும்பாபிஷேகம், நேற்று காலை, 7:00 மணிக்கு நடைபெற்றது.இதில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, இன்று (பிப்., 19ல்), காலை, 7:00 மணிக்கு, வெங்கட்ராம சுவாமிகளின், 12ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெறுகிறது. நாளை (பிப்., 20ல்), அருகே உள்ள வடபழனி ஸ்ரீலஸ்ரீ பரஞ்ஜோதி பாபா கோவிலின், ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது.