பதிவு செய்த நாள்
19
பிப்
2019
03:02
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான கம்பம் நடுதல் நிகழ்ச்சி இன்று (பிப்., 19ல்) நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று (பிப்., 19ல்) இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் அபிஷேக பூஜைகள் நடக்கிறது. கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்பின், மஞ்சள், குங்குமம் பூசி, பூக்களால் அலங்கரித்து பூஜைகள் நடக்கிறது.
மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு, 11:30 மணிக்கு மேல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 26ம் தேதி பூவோடு எடுத்தல்; மார்ச், 1ம் தேதி கிராம சாந்தியும் நடக்கிறது. மார்ச், 2ம் தேதி கொடி கட்டுதல்; 5ம் தேதி இரவு அபிஷேகம் 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; இரவு, 7:00 மணிக்கு முதல் தேரோட்டம் நடக்கிறது. மார்ச், 7ம் தேதி இரண்டாம் நாள் தேரும்; 8ம் தேதி தேர் மூன்றாம் நாள் நிகழ்ச்சியும், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. மார்ச் 9ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும்; 11ம் தேதி மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.