ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் மாசிமகத்திருவிழா உற்ஸவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 10 :00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களை ரகு மற்றும் ரமஷே் பட்டர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல்அலுவலர் சுந்தர்ராஜ் கோயில் அலுவலர்கள், பட்டர்கள் செய்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை வீதி உலா நடந்தது.
* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு மாசிமகத்திருவிழா வெகு சிறப்புடன் நடந்தது. இதையொட்டி மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சுவாமி, வள்ளி, தெய்வானை தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அணையாவிளக்கு தீபம் ஏற்றபட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி, தேவியருடன் வீதியுலா எழுந்தருளினர். ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.