மானாமதுரை: மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மக தெப்ப உற்ஸவ விழா நடைபெற்றது.
தாயமங்கலம் ரோட்டில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி மகத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனையும் நடந்தது. மாலை அம்மன் வீதியுலாவும், இரவு 9:00 மணிக்கு கோயிலில் உள்ள தண்ணீர் நிறைந்த தெப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்கு அம்மன் கொண்டு செல்லப்பட்டு தெப்ப உற்ஸவ விழா நடைபெற்றது.பக்தர்கள் தெப்பத்தை சுற்றி விளக்கேற்றி வழிபட்டனர்.