திருமுருகன்பூண்டி: திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழாவின், முக்கிய வைபவங்களில் ஒன்றான, தெப்போற்சவம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. மலர் அலங்காரத்தில், தெப்பத்தில் எழுந்தருளி உலா வந்து, அம்மையப்பர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.