பதிவு செய்த நாள்
22
பிப்
2019
12:02
ஓமலுார்: சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை கண்டு, பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் பிப்., 21, 22, 23ல், மாலை, சூரியன் சிவனை வணங்குவது போல், அதன் ஒளி, கருவறைக்குள் செல்லும் அரிய நிகழ்வு தென்படும். அதன்படி, நேற்று மாலை, 6:10 மணிக்கு, சூரிய ஒளி, ராஜகோபுரம் வழியாக, கொடிக்கம்பம், நத்தி சிலையை கடந்து, கோவில் கருவறைக்குள் தென்பட்டது. அப்போது, கோவிலிலிருந்த மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சில நொடிகள், மட்டும் கருவறையில் தெரிந்தது. அதை பார்த்து, பக்தர்கள் ஆர்வத்துடன் எழுந்ததால், தடைபட்டு ஒளி மறைந்தது. பின், தீபாராதனை நடந்தது. இன்றும், நாளையும், இந்நிகழ்வு நடக்கும்.