* தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. ஒழுக்கமுடன் வாழ்வதே வெற்றிக்கான வழி. * உலக ஆசைகளில் சிக்கிக் கிடக்கும் மனதை குருவால் மட்டுமே சுதந்திரமாக்க முடியும். * மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. அவரிடம் அமைதி, பொறுமை, மன்னிக்கும் குணம் போன்ற நற்பண்புகள் இருக்க்கும். * மவுனமாக இருப்பது நல்லது. ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்தால் மவுனமாகாது. * மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும் போது சக்தி சேமிக்கப்பட்டு வலிமை பெறுகிறது. * நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் வலிமை அற்ற மனம் தான். * வலையில் பிடிபடும் பறவை போல மூச்சுப்பயிற்சி மூலம் அலையும் மனதை அடக்க முடியும். * எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. மனதில் எழும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் பலன் உண்டு. * கடவுளின் திருநாமங்கள், மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். சொல்கிறார் ரமணர்