பதிவு செய்த நாள்
01
மார்
2012
11:03
தென்காசி :தென்காசி மந்தமாரியம்மன் கோயிலில் மூன்று நாட்கள் கொடை விழா நடந்தது. தென்காசி கீழப்பாளையம் மந்தமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு முதல் நாள் காலையில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது. இரவு அம்மனுக்கு மா காப்பு அலங்கார தீபாராதனை, பட்டிமன்றம் நடந்தது. இரண்டாம் நாள் காலையில் அபிஷேகம், தீபாராதனை, இரவு மஞ்சள் காப்பு தீபாராதனை, தீபாராதனை, ஆன்மிக இன்னிசை கச்சேரி நடந்தது. மூன்றாம் நாள் காலையில் கணபதி ஹோமம், துர்க்கை ஹோமம், பால்குடம், அபிஷேகம் நடந்தது. மதியம் விண்ணகரப் பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்பாள் வீதி உலா எழுந்தருளல், நள்ளிரவில் சிற்றாற்றிலிருந்து அம்மனுக்கு சக்தி குடம், தீச்சட்டி எடுத்து வருதல், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.