பதிவு செய்த நாள்
09
மார்
2019
11:03
சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படை மகாமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையில், காலை 10:15 மணிக்கு அர்ச்சகர் சந்திரசேகரசுவாமி கொடி ஏற்றிவைத்தார்.
கூடுதல் எஸ்.பி., மங்களேஸ்வரன், ஆயுதப்படை டி.எஸ்.பி., செல்வின், இன்ஸ்பெக்டர்கள் சீமான், குலசேகரமந்திரசெல்வி உட்பட ஆயுதப்படை போலீசார், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சிஅளித்த மகாமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கரும்பு தொட்டில் கட்டுதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.