பதிவு செய்த நாள்
09
மார்
2019
12:03
மதுரை: மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா மார்ச் 26 ல் நடக்கிறது.
அன்று மாலை 6:00 மணிக்கு மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, நான்கு மாசி வீதிகள், யானைக்கல், வடக்கு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை வழியாக கோயில் சேர்த்தியாகும். பின் மாரியம்மனுக்கு பூச்சொரிதல், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.