* மனம் போன பாதையில் செல்ல மனிதர்கள் விரும்புகின்றனர். உயர விரும்பினால் அறிவு காட்டும் பாதையை தேர்ந்தெடுங்கள். * வாழ்க வளமுடன் என வாழ்த்தும் போதும் நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும். * பகை உணர்வுடன் யாராலும் வாழ்த்த முடியாது. வாழ்த்தப் பழகினால் மனதில் பகைமை நிற்காது. * எந்த சூழ்நிலையிலும் கோபம் வராமல் யார் இருக்கிறாரோ அவர் ஞானம் அடைந்து விட்டார் என அர்த்தம். * எல்லா உயிரும் கடவுளின் வடிவமே என்று கருதிச் செய்யும் ஒவ்வொரு செயலும் அன்பின் செயலே. * மனத்தை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும். * ஆசையை அடியோடு ஒழிக்க வேண்டாம்; அதை சீர்படுத்தினால் போதும். * தீர்க்க முடியாத பிரச்னை என ஏதுமில்லை; தீர்க்கும் வழியை அறிவது தான் எல்லோருக்கும் பிரச்னை. * அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு. * திறமையின்மை, அச்சம் இரண்டும் கவலையை பெருக்கும் கருவிகள். - பதிலளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி