* தினமும் நீர் ஊற்றினாலும் பருவ காலத்தில் தான் கனிகளை கொடுக்கும் மரம். அவசரம் வேண்டாம். * பலம் குறைந்தவனைத் தொந்தரவு செய்யாதே; அவன் பெருமூச்சு மிக வலிமை வாய்ந்தது. * அன்பு இல்லாத எந்த மனிதனின் உடலும் சுடுகாடு தான். அன்பால் மட்டுமே உலகம் செழிக்கும். * உன் மூச்சின் மூச்சாகவும், உயிரின் உயிராகவும் கடவுள் இருக்கிறார் என்பதை உணர்வாயாக. * தெய்வத் தன்மையுள்ள மனிதர்களை நம்பு; நீயும் தெய்வத் தன்மை பெற்று விடுவாய். * நான் என்னும் கர்வத்தை கைவிடு; அனைவரும் உன்னிடம் அன்பு பாராட்டுவார்கள். * உடலளவில் யோகியாக மாற யாராலும் முடியும்; மனதளவில் மாறுவதே சாதனை. * ஓடும் நதி கடைசியில் கடலில் சங்கமமாகும்; மனிதனும் இறுதியில் கடவுளிடம் சங்கமமாக வேண்டும். * யாருடைய உள்ளத்தில் உண்மை இருக்கிறதோ அவரைத் தேடி கடவுளே வருவார். - நெறிப்படுத்துகிறார் கபீர்தாசர்