மத்தியப் பிரதேச மாநிலம் கனுரஹோவில் உள்ளது மதங்கேஸ்வரர் கோயில். இங்குள்ள லிங்கத் திருமேனி சுமார் 7 அடி உயரம் உள்ளது. மதங்கேஸ்வரர் என்றால், "மரணத்தை வென்றவர் என்று பொருள். இங்கு, மகாசிவராத்திரி அன்று நடைபெறும் சிவ - பார்வதி திருக்கல்யாண வைபவம் பிரசித்தியானது. மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத் திருமேனியை மாப்பிள்ளைக் கோலத்தில் அலங்கரிக்கின்றனர். அப்போது, காவி வேட்டி, வெள்ளைத் துண்டு, பூமாலை, கிரீடத்துடன் திகழும் லிங்கத் திருமேனியைக் காண கண்கோடி வேண்டும். அன்று இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும். அதிகாலை வேதியர்கள் லிங்கத்தின் மீது உதிரிப்பூக்களை சொரிவர். அத்துடன் திருமணச் சடங்கு முடியும்.