சூரிய ஒளியை ஒரு ஆடியின்மூலம் (லென்ஸ்) ஓரிடத்தில் குவிக்கும்போது, அதன் ஒளி பன்மடங்கு பெருகி அங்குள்ள பொருளை எரியச் செய்யும். அதுபோல தன் மாணவர்கள் திடீரென்று அருள்பெறும் சக்தியை அளிப்பவர் சூரியகாந்த குரு. தர்ப்பணம் என்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி என்ற பொருளும் உண்டு. உள்ளதை உள்ளபடியே பிரதிபலிப்பது கண்ணாடி. அதுபோல மாணவர்களின் மனநிலையை உள்ளபடி அறிந்து, அவர்களுடைய அறியாமையைப் போக்குபவர் தர்ப்பண குரு.