ஒரு குறிப்பிட்ட பறவையின் நிழல் பூமியில்படும்போது அங்குள்ள பொருட்கள் பொன்னாக மாறும் என்பர். அதுபோல தன் நிழல்பட்ட மாத்திரத்திலேயே அறியாமையை நீங்கச் செய்பவர் சாயாநிதி குரு. ஒருவகையான சப்தசுவரக் கல்லிலிருந்து வெளிப்படும் ஒலி சுற்றுச்சுழலை இனிமையாக்கும் தன்மை கொண்டது. அதுபோல் தன் சொல்லால் மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி உயர்த்திவிடுபவர் நாதநிதி குரு.