Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் வளர்ச்சி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பிள்ளைகளால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பிள்ளைகளால் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

13 மார்
2019
04:03

கலையுணர்வுடன் ரசித்து வாழும் கடக ராசி அன்பர்களே!

சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். புதன் ஏப்.8 வரையும், செவ்வாய் மார்ச்20க்கு பிறகும், சுக்கிரன் மார்ச் 22க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார்கள். உங்களின் ஆற்றல் மேம்படும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செயலில் அனுகூலம் ஏற்படும். சூரியனால் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். அண்டை வீட்டாரின் தொல்லை மறையும்.  மார்ச் 20க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். மார்ச் 22க்கு பிறகு ஆடம்பர வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

அவர்களால் பொன், பொருள் சேரும். மார்ச் 17,18 ஏப்.13ல் சகோதரவழியில் உதவி கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். மார்ச் 21,22ல் உறவினர் வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் ஏப்.9,10ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஏப்.8க்கு பிறகு சிலர் வீண்பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும்.

பணியாளர்களுக்கு வேலையில் தொய்வு இருக்காது. கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சிலர் விரும்பிய பதவி உயர்வை அடைவர். வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.  மார்ச்20க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஏப்.6,7,8ல் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். அதன் பிறகு வேலைப்பளு அதிகமாகும்.  

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். செவ்வாயால் மார்ச் 20க்கு பிறகு வருமானம் கூடும்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் பெறும். மார்ச் 28,29ல் அதிர்ஷ்டவசமாக ஆதாயம் வரும். மார்ச்15,16,19,20, ஏப்.11,12ல் சந்திரனால் சிறுதடைகள் வரலாம். ராகுவால் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஏப்.8க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.  

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்ப்பாடுகள் மார்ச் 22க்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். மார்ச் 20க்கு பிறகு மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.  மார்ச் 25,26,27ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.                           

மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். ஏப்.6க்கு பிறகு சிலர் தீயநண்பர்களின் சேர்க்கையால் பிரச்னைக்கு ஆளாகலாம். கவனம் தேவை.

விவசாயிகள் பழங்கள், கீரை வகைகளில் நல்ல வருமானம் காண்பர். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மார்ச் 20க்கு பிறகு கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் ஏற்பட்ட தொல்லை மறையும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மார்ச் 20க்கு பிறகு சிலருக்கு புதிய பதவி தேடி வரும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.  

மார்ச் 30,31ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். மார்ச்21,22ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஏப்.8க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம்.

* நல்ல நாள்: மார்ச் 17, 18, 21, 22, 28, 29, 30, 31, ஏப்.6, 7, 8, 9, 10, 13
* கவன நாள்: ஏப்.1, 2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4, 6    நிறம்: சிவப்பு, கறுப்பு

பரிகாரம்:
*  ஞாயிறன்று ராகுகாலத்தில் காளி வழிபாடு
*  காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
*  செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar