பதிவு செய்த நாள்
13
மார்
2019
04:03
விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!
சுக்கிரன், குரு ஆகியோரால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். செவ்வாய் மார்ச்20 வரையும், புதன் ஏப்.8 வரையும் நற்பலன் தருவர். பொன், பொருள் சேரும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். ஆடம்பர பொருட்கள் சேரும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகமுண்டு. மார்ச்21க்கு பிறகு புதிய உறவினர்களின் அறிமுகம் கிடைக்கும். ஏப்.25,26,27ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். மார்ச்21,22ல் உறவினரால் உதவி கிடைக்கும். ஆனால் ஏப்.1,2ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம் கவனம்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு குறையும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மார்ச் 20க்குள் கேட்டு பெறவும். மார்ச்19,20ல் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். ஏப்.8க்கு பிறகு வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அரசு பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு கடந்த மாதம் பெண்களால் ஏற்பட்ட இடையூறு அடியோடு மறையும். ஆனால் இந்த மாதம் பகைவரால் தொல்லை அதிகரிக்கும். இருப்பினும் பொருளாதார வகையில் பின்தங்கிய நிலை உண்டாகாது. வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். கேதுவால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப்.6,7,8ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மார்ச் 23,24,28,29 ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.8க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி மார்ச்20க்குள் கிடைக்கும்.
மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். ஏப்.8க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சோம்பலால் பின்தங்கிய சூழலுக்கு ஆளாகலாம் கவனம்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். பால் தொழில் நல்ல முன்னேற்றம் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மார்ச்20க்குள் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். அக்கம் பக்கத்தினர் தொல்லை மறையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மார்ச் 30,31 சிறப்பான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் சேரும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் வரப் பெறலாம். ஏப்.9,10ல் சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். ஏப்.7 க்கு பிறகு குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம். மார்ச் 17,18,19,20 ஏப்ரல் 13ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
* நல்ல நாள்: மார்ச் 19, 20, 21, 22, 25, 26, 27, 30, 31 ஏப்.6, 7, 8, 9, 10
* கவன நாள்: மார்ச் 15,16 ஏப்.11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6, 8
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்:
* சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை
* பிரதோஷத்தன்று மாலை நந்தீஸ்வரர் வழிபாடு
* வெள்ளிக்கிழமையில் லட்சுமி தாயாருக்கு தீபம்