பதிவு செய்த நாள்
16
மார்
2019
11:03
பழநி, பங்குனி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை வழிபாடு நடந்தது. பங்குனி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், யாகபூஜை நடந்தது.
விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கினர். இதேபோல திருஆவினன்குடி கோயில், குழந்தைவேலாயுதசுவாமி சிறப்பு அலங்காரத்திலும், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள்வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.