முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தின் முன் மண்டபத்தில் முருகன் – தெய்வானை திருமணக்கோலம் சிற்பமாக உள்ளது. முருகன், தெய்வானை, முருகனின் மாமனார் இந்திரன் ஆகியோர் முத்து மாலைகள், பதக்கங்கள் அணிந்தபடி உள்ளனர். இதற்கு எதிரிலுள்ள தூணில் மணக்கோலத்தை தரிசிக்கும் விதமாக மகாராணி ராணி மங்கம்மா, அவரது பேரன் விஜயரங்க சொக்கநாதன் ஆகியோர் கை கூப்பி நிற்கின்றனர். ராணியின் கழுத்தில் முத்து மாலை இல்லை. கைகளில் வளையல்கள், விரல்களில் மோதிரம், தலையில் கொண்டையுடன் காட்சியளிக்கிறார் ராணி.