கைலாயத்தில் ஒருநாள் பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் சிவன். அப்போது தாயின் மடியில் இருந்த முருகனும் கேட்டார். குருநாதரின் மூலமாகத் தெரிய வேண்டிய ரகசியத்தை, மறைமுகமாக கேட்டதால் முருகன் பாவத்திற்கு ஆளானார். இதற்கு பரிகாரமாக பூலோகத்தில் தவம் செய்தார். முருகனுக்கு பரம்பொருளான சிவன் காட்சியளித்த தலம் ’பரங்குன்றம்’. இதுவே முருகனின் முதல் வீடான திருப்பரங்குன்றம். முருகனும், தெய்வானையும் மணக்கோலத்தில் இங்கு உள்ளனர். இந்த மலை மேற்கில் சிவலிங்கம் போலவும், வடக்கில் கைலாயம் போலவும், தெற்கில் யானை போலவும் காட்சி தருகிறது. பவுர்ணமியன்று மலையைச் சுற்றி வந்தால் விருப்பம் நிறைவேறும்.