பொருள்: ”கிருஷ்ணா! மனம் அலைபாயும் தன்மை கொண்டது. கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய ஐம்புலன்களுடன் விருப்பமுடன் கலக்கும் இயல்பு கொண்டது மனம். திடமானது. வலிமை மிக்கது. அதை அடக்குவது என்பது காற்றைத் தடுத்து நிறுத்துவது போல கடினமானது என நினைக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.
”அர்ஜுனா! நீண்ட புஜங்களைக் கொண்டவனே! சந்தேகம் இல்லாமல் மனம் சஞ்சலம் கொண்டது தான். அதை வசப்படுத்துவதும் கடினம் தான். ஆனால், குந்தியின் மகனே! பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மனதை வசப்படுத்த முடியும்” என பதிலளித்தார் கிருஷ்ணர்.