இறைவனிடம் தேவையைச் சொல்லி பிரார்த்தித்தால் கேட்டதை தருகிறான் (அ)நம்முடைய வேறு தேவையை பூர்த்தி செய்கிறான் (அ) நம் கோரிக்கையை மரணத்திற்கு பின்வரும் மறுமை நாளுக்காக சேகரித்து வைக்கிறான். இப்படியாக ’துஆ’ எனப்படும் பிரார்த்தனை முக்கியத்துவம் பெறுகிறது. ” தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையாக இருப்பவர்களையும் மட்டுமே இறைவன் நேசிக்கிறான்’ என்னும் குர்ஆன் வசனம் இங்கு நினைவுகூறத் தக்கது. வேண்டாத உணர்வுகள், தீய எண்ணங்களை தள்ளி விட்டு மனத்தூய்மை காப்போம்; நேர்மையுடன் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.