நான் வைத்ததே சட்டம்; நான் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும். நினைத்ததை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று ஆணவத்துடன் செயல்படுவோர் உலகில் இருக்கிறார்கள். தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள் என்பதே இவர்களின் எண்ணம். இவர்களை நோக்கி நபிகள் நாயகம், ”மனிதர்கள் வெளிஅழகை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். மரணத்துக்குப் பின்வரும் மறுமை வாழ்வு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இம்மை, மறுமை வெவ்வேறானவை. நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறுங்கள். உலக மனிதர்களாக ஆகி விடாதீர்கள். இங்கு செயல் மட்டுமே கேள்வி இல்லை. அங்கோ கேள்வி மட்டுமே; செயல் இல்லை” என்னும் வசனத்தை கூறியுள்ளார். ஆம்... இங்கே வேண்டுமானால் பாவச்செயல்களை செய்து பலனடையலாம். கேள்வி கேட்பவர்களையும் ஒடுக்கலாம். ஆனால் மறுமையில் பாவச்செயல்களுக்கு பதில் சொல்லத் தான் வேண்டும்!