வறுத்த பச்சரிசி மாவு – 200 கி உளுந்த மாவு – 50 கி தேங்காய் – அரை மூடி உப்பு – அரை ஸ்பூன் வனஸ்பதி – கால்கிலோ
செய்முறை: தேங்காயைத் துருவி பால் எடுத்து கொதிக்க வைத்து இறக்கவும். அரிசி, உளுந்தமாவுடன் உப்பு, தேங்காய்ப்பால், சிறிதளவு வனஸ்பதி சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். வனஸ்பதியை வாணலியில் காய வைத்து எண்ணெய் கொள்ளும் அளவு சீடைகளை போட்டு நான்றாக வேக வைத்து எடுக்கவும். சூடான சுவையான சீடை ரெடியாகிவிடும்.