மத்தகம் என்னும் யானையின் முன்நெற்றியில் லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனடிப்படையில் தினமும் கோயில் நடை திறந்ததும் கருவறை முன் யானைக்கு பூஜை நடத்தி வலம் வரச் செய்வர். இதற்கு ’கஜபூஜை’ என்று பெயர். யானையின் பிளிறல் ஓசையைக் கேட்டால் லட்சுமியின் மனம் மகிழும். பங்குனி உத்திரத்தன்று பாற்கடலில் லட்சுமி அவதரித்தாள். பூமியைத் தாங்கும் 8 யானைகளும் பாற்கடலுக்கு சென்றன. லட்சுமியை புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டன. இதனால் ’கஜலட்சுமி’ என பெயர் பெற்றாள். ’கஜம்’ என்றால் ’யானை’. கஜலட்சுமியின் சிற்பத்தை கோயில் கருவறை, வீட்டின் தலைவாசல் நிலையில் அமைப்பது நல்லது.