● அரண்மனைக்கதவு போல பாதுகாப்பாக உதடுகள் இருக்க வேண்டும். வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதி, நிம்மதி தருவதாக இருக்க வேண்டும். ● செழுமை மிக்க மலை போல தூரத்தில் இருந்தாலும் மகிழ்ச்சி தருபவன் நல்லவன்; இருளில் எய்த அம்பாக கண்ணுக்குத் தெரியாமலேயே துன்பம் தருபவன் தீயவன். ● உயிர்களை நேசித்து வாழுங்கள். அன்பே உலகின் மகாசக்தி. ● அடக்கம் இல்லாமல் நூறாண்டு வாழ்வதைக் காட்டிலும், ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது நல்லது. ● நோயற்ற வாழ்வே பெரும் பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். ● தீய குணங்களை கொண்டவர்கள் உடலழகு, பேச்சால் மட்டும் நல்லவராகி விட முடியாது. ● பிறருக்கு கொடுத்து மகிழ்வதே இன்பம். ● உங்களுடைய வார்த்தைகளால் ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல. ● அனைத்தும் ஒருநாள் அழிந்தே தீரும். இது குறித்து கவலைப்படுவது அறிவுடைமையாகாது. - புதிர் சொல்கிறார் புத்தர்