Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெருப்பாய் உயர்ந்து நில்! புதுமணத் தம்பதிகள் காசி, ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெரிந்ததை செய்யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
01:03

முடியாது’ என்ற வார்த்தை அகராதியில் இருக்கக்கூடாது தான். அதற்காக, மரம் வெட்ட படித்தவன், ரசாயனப்பொருள் தயாரிக்க ஆசைப்படக்கூடாது. அவரவருக்குரிய துறையில் சாதனை படைக்க வேண்டும். ஒரு சிறு வியாபாரி மூன்று மகள்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். வருமானம் அன்றாட செலவுக்கே தட்டுப்பாடாக இருந்தது. திருமணத்துக்கோ பெரும் பொருள் தேவைப்பட்டது. ஒருநாள், வியாபாரத்தை முடித்து விட்டு மரத்தடியில் அமர்ந்தார். கையில் இருந்த பேப்பரில், இசைஞானி ஒருவர் பற்றியும், இசையால் அவர் கோடீஸ்வரர் ஆனது பற்றியும் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. “ஆகா... பாட்டு படிச்சா பணக்காரன் ஆகலாமாமே! நாமும் பாடலாம்,” என்று பாட ஆரம்பித்தார். ஆனால், அத்தனையும் அபஸ்வரம்.


அந்த மரத்தில், இறந்து போன சங்கீத வித்வான் பேயாக இருந்தார். அந்த பேய் வெளிப்பட்டு, “ஐயா சாமி! தயவுசெய்து பாடாதே. இந்த அபத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை,” என்றது. “எனக்கு பணம் வேண்டுமே! பாடினால் பணம் கொட்டுமென இந்த பேப்பரில் போட்டிருக்கிறார்களே!” என்று அவர் பதிலளித்தார். அதற்கு பேய், “அவ்வளவுதானே! நான் இவ்வூர் பண்ணையார் மகளைப் பிடித்துக் கொள்கிறேன். அவரும் எவ்வளவோ வைத்தியம் பார்த்து நொந்து போவார். அந்த நேரத்தில் நீர் போய், இங்கே பாடிய மாதிரியே பாடும். நான் உம் அபஸ்வரம் தாங்கமால் அவளை விட்டு ஓடிவிடுவேன். வேண்டிய அளவு பணத்தை பணக்காரர் மகிழ்ச்சியுடன் தருவார்,” என்றது. அதன்படியே செய்தார் வியாபாரி. தனக்கு தெரிந்த வியாபாரத்தையே பெரிய அளவில் நடத்தினார். இப்போது, அவரும் ஊர் பணக்காரர்களில் ஒருவர். தெரிந்த தொழிலை சிரத்தையுடன் செய்தால், வாழ்வில் வெற்றி உறுதி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar