பதிவு செய்த நாள்
23
மார்
2019
11:03
மானாமதுரை: கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.தொடர்ந்து உற்ஸவர் குதிரை,காமதேனு,காளை போன்ற வாகனங்களிலும்,பூப்பல்லக்கிலும் புறப்பாடாகி வீதிவுலா வந்தார். இரவு கோயில் முன் கலைநிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமிகள் தேருக்கு எழுந்தருளிய பின்னர் தேரோட்டம் நடந்தது.தொடர்ந்து சுவாமி குதிரை வாகனத்தில் முத்தனேந்தல் கிராமத்திற்கு எழுந்தருளினார்.
இளையான்குடி: இளையான்குடி அருகே, தரிகொம்பனில் அமைந்துள்ள பாலசுப்பிரமணி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. கடந்த 12ல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த, பங்குனி உத்திர விழாவில், பாலசுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள், பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.